Wednesday, 7 September 2011

kirukkalgal

அலைகள் எல்லாம் சுனாமிதான்

கட்டிய வீட்டை
பறிகொடுத்துக்கொண்டே இருந்தது
கடற்கரை நண்டு



கூச்சம்

நான் நெருங்க, அது விலக,
அது நெருங்க, நான் விலக,
தொடாமல் விளையாடிக்கொண்டு இருந்தோம்.
நானும் அலையும்......!


நானும் நண்டும்

கடற்கரையில் பந்தயம்
அடைய வேண்டிய இடம் வளை
எப்போதும் வெற்றி
நண்டுக்குத்தான்......



நான் பயணம் செய்த மாநகரப் பேருந்தில் உன்னை,
முதல் முதலாய் , பார்த்த உடனே வேண்டிக்கொண்டேன்...
"கடவுளே, இன்றெல்லாம் ப்ரேக் டவுன் ஆகக் கூடாதா இப்பேருந்து...?"


நீ உன் வீட்டில் தனிமையில் இருக்கும் போது மின் விசிறியை மட்டும் போடாதே ..!
அது தன்னை தானே சுற்றாமல் உன்னையே சுற்றி சுற்றி வரும் .


உன் வீட்டு வாசலை கடக்கும் போதெல்லாம்
ஜன்னலின் வழியே ஓர் உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற எண்ணம் எனக்குள் ...


உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களையும் பார்த்துவிட ஆசை எனக்குள் ..
அதில் எந்த பெண்ணாவது உன் அழகில் பாதியாவது இருக்கின்றார்களா...?
என்பதை தெரிந்து கொள்ள மட்டும்..